நடிகர் முத்துக்காளை வெளியிட்ட காணொளி... நன்றி கூறி கண்கலங்க வைத்த தருணம்
நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு வெளியிட்டுள்ள காணொளி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
நடிகர் முத்துக்காளை
தமிழ் சினிமாவில் தனது காமெடியான நடிப்பினால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த முத்துக்காளை சமீபத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இவரது மனைவி மூளையில் ரத்த கசிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 19 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னிடம் மேல்சிகிச்சைக்கு பணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
தற்போது முதல்வராக இருக்கும் விஜயிடம் உதவி கேட்டு கோரிக்கையும் வைத்திருந்தார். முத்துக்காளையின் கோரிக்கையை அவதானித்த விஜய் உடனே ஆக்ஷனில் இறங்கினார்.

அதாவது முத்துக்காளையிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போனில் பேசியதுடன், அமைச்சர் ராஜ் மோகன் நேரில் சந்தித்து மேல் சிகிச்சைக்கு உதவி செய்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதல்வர் உடனடியாக சிகிச்சைக்கு உதவியும் உயிர் பிழைக்கவில்லையே என்ற அதிருப்தி மக்களிடையே ஏற்பட்டது.
மனைவி உடல் அருகே இருந்து முத்துக்காளை கதறியழுத நிகழ்வு பார்வையாளர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது. தற்போது முத்துக்காளை புதிய காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது தனது மனைவியின் மேல்சிகிச்சைக்கு உடனடியாக உதவிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். முத்துக்காளையின் நன்றி காணொளி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
மனைவி இறந்த துக்கத்திலும், தனது மனைவிக்கு உதவிய நபர்களுக்கு நன்றி கூறுவதற்கு காணொளி வெளியிட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |