தன் பெயரோடு சேர்த்து முதன் முறையாக மகளின் பெயரை அறிவித்த ஆர்யா- சாயீஷா தம்பதி; பூரித்துப்போன ரசிகர்கள்
நடிகர், ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து, விஷால், தான் மாமாவாகிவிட்டதாகக் கூறி, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று பெண் குழந்தைகள் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்கள் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் நடிகர் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''அப்பாவாக இரண்டு மாதங்களை கழித்துவிட்டேன். மகள்கள் தின வாழ்த்துகள் அரியானா'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு மூலம் அரியானா என்ற தனது மகளின் பெயரை முதன் முதலாக அறிவித்துள்ளார்.