மகளிர் தினத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட தரமான பதிவு! குவியும் லைக்குகள்
விவாகரத்து சர்ச்சையின் பின்னர் தனது இரண்டு மகன்களுடன் தனித்து வாழ்ந்துவரும் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் அதிகளவாக கவனம் பெற்று வருகின்றது.
இந்நிலையில், அழகிய சேலையில் செம கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஆர்த்தி ரவி மகளிர் தினத்துக்காக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ரவி மேகன் - ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் ஆர்த்தி ரவியுடன் தான் வளர்கின்றார்கள்.

ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் ரவி மோகன் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே கடினமான சூழ்நிலைகளையும் நிதானத்துடன் கடந்து வருகின்றார்.

தியானம் செய்வது, நெருங்கிய நண்பர் வட்டாரத்துடன் சுற்றுலா செல்வது போன்ற விடயங்ளின் மூலம் தன்னை தானே மீட்டுக்கொண்டு தனது மகன்களுக்கு ஒரு நல்ல தாயாக திகழ்ந்துவரும் ஆர்த்தி ரவி மகளிர் தினத்தில் அழகிய புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |