எப்போ கல்யாணம்? அமீர் - பாவனி இடையே கொளுத்திப்போட்ட பிரியங்கா!
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், பாவனி மற்றும் அமீர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். வைல்டு கார்டு என்டிரியாக வந்த அமீர் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பல சர்ச்சைகளில் சிக்கினாலும், பாவனி தன்னுடைய விடாப்பிடியான ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3-வது இடத்தை பிடித்து அசத்தினார்.
முதன் முறையாக கையில் குழந்தையை ஏந்தியபடி காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்
அமீர் பாவனி கல்யாணமா?
இந்நிலையில், இந்த ஜோடிகள் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது. அண்மையில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் பிரியங்கா கொளுத்திப்போட்டுள்ளார்.
அதாவது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே வரும் பிரியங்கா, அபிஷேக், வேல்முருகன் உள்ளிட்டோரிடம் பேசுகிறார்.
தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியே இவர்களுக்காக தான் ஆரம்பிக்கப்பட்டது என அமீர் மற்றும் பாவனியை அறிமுகம் செய்கிறார்.
பிரியங்கா செய்த வேலை
அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஜோடியாக ஆடுகின்றனர். மேலும், பேசும் பிரியங்கா, இந்த சீசன் முடிவதற்கு கல்யாணம் செஞ்சுக்குவீங்களா? என கேட்கிறார்.
அதற்கு பாவனி, அமீருக்கு ராக்கி கயிற்றை கட்டப்போவதாக கூற, அமீரின் முகம் வாடிப்போகிறது. பின்னர், பிரண்ட்ஷிப் பேண்ட் கட்டப்போவதாக பாவனி தெரிவிக்கிறார். இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.