49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி
நடிகை ரம்பா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அசத்தல் தாவணியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவை பிறப்பிடமாக கொண்ட ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.அழகான வசீகரிக்கும் முகத்தாலும், அவரின் தொடையழகினாலும் தத்துரூபமாக நடிப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரம்பா, 'உழவன்' என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து, 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகிய இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழக்கு போட்ட ரம்பா தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார். தற்போது விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 3 இல் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

இந்நிலையில், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான பின்னரும் குறையாத அழகில் 49 வயதிலும் தாவணி அணிந்து அசத்தல் போஸ் கொடுத்து நடிகை ரம்பா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |