புகழ் பெறுவதற்கு சிறுமி செய்த காரியம்... அதிரடி நடவடிக்கையால் காணொளியில் கதறிய கொடுமை
சமூகவலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்று காணொளி வெளியிட்ட சிறுவர்கள் இன்று மன்னிப்பு கேட்டு காணொளியினை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த டிக் டாக் செயலி பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் இந்த ஆப் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது. இதனால் டிக் ஆண்டு இருந்த பலரும் இன்ஸ்டாகிராம் யூடுயூப் என்று தாவி அதில் வீடியோ போட துவங்கிவிட்டனர்.
டிக் டாக் மூலம் பல 2k கிட்ஸ் பசங்க கூட பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் பள்ளிக்கு செல்லும் வயதில் வயதுக்கு மீறி வீடியோ போட்டு பிரபலமானவர் குட்டி வடிவேலு.
சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என்று இவரது காதலியுடன் வீடியோ ஒன்றை போட்டு இருந்தார். அதில் அந்த சிறுமியின் அம்மா அந்த சிறுமியை மருமகளே என்று கூப்பிடுவதும், பதிலுக்கு அந்த பையன் அத்தை என்று கூப்பிடுவதும் பல 90ஸ் கிட்ஸ்களை எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.
பல 90ஸ் கிட்ஸ்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கையில் இன்னும் வயசுக்கு கூட வராத இவர்கள் இருவரும் பொழிந்த காதலை பார்த்து பலரும் கடுப்பாகினர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தரப்பில், கடலுார் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், அலுவலர்கள், வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின் சிறுமியை மீட்டு, கடலுார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுமி, தான் பேசியது தவறு என்றும் இனிமேல் எந்த காணொளியும் எடுக்க மாட்டேன் என்றும் புகழ் பெறுவதற்காக இவ்வாறு காணொளியினை போட்டுள்ளதாகவும் கூறி மன்னிப்பு காணொளியை வெளியிட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட #2K மருமகள்... pic.twitter.com/v8SppZFsxm
— chettyrajubhai (@chettyrajubhai) May 12, 2021