மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 14 செவிலியர்கள் கர்ப்பம்! நம்பமுடியாத உண்மை
அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்யும் செவிலியர்களில் 14 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நம்பமுடியாத ஆச்சரியம்
ஒரு பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள், ஒரே பிரசவத்தில் ஒரு டஜன் செவிலியர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் கூட கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் ஒரு மருத்தவமனையின் பாதி செவிலியர்களே ஒரே நேரத்தில் பிள்ளை பெற போவதை நம்பமுடியாத நிகழ்வாக இருந்தாலும், குறித்த உண்மையை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் 14 செவிலியர்கள் கர்ப்பம்
மிசௌரியில் உள்ள கென்சஸ் மாகாணத்தின் neonatal intensive care unit at Saint Luke's Hospital பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த மருத்துவமனையின் செவிலியர்கள்தான் தற்போது உலக வைரல். கிட்டத்தட்ட அந்த மருத்துவமனையின் 14 செவிலியர்கள் தற்போது குழந்தை பெற இருக்கின்றனர்.
இதுகுறித்து குட்மார்னிங் அமெரிக்கா பத்திரிக்கைக்கு ஒரு செவிலியர் கொடுத்த பேட்டியில் தான் கருவுற்றிருப்பதை தன் குடும்பத்திற்கு சொல்வதற்கு முன்பு சக செவிலியர்களிடம் தான் பகிர்ந்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
சில செவிலியர்கள் பேசும்போது முதலில் சிலர்தான் ஆரம்பித்தார்கள். பின்னால் நிறைய பேர் தாங்கள் கருவுற்றிருப்பதாக சொல்ல துவங்கிவிட்டனர் என்று கூறுகின்றனர்.
மேலும் அந்த மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ITS A BABY BOOM என்று பதிவிட்டுள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். இப்படி ஒரே சமயத்தில் இத்தனை செவிலியர்கள் கருவுற்றிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.